×

தமிழுக்கு முக்கியத்துவம் டிஜிபிக்கு திருக்குறள் பேரவை பாராட்டு

கரூர், நவ. 26: தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி, தகவல் தொடர்பு, கடிதத்தொடர்பு அனைத்தும் தமிழில் இருக்கவேண்டும். காவல்துறை வாகனங்களில் தமிழில் காவல்துறை என்ற வாசகம் இடம்பெற வேண்டும். வருகைப்பதிவேட்டில் அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்தை பாராட்டுவதாக கரூர் திருக்குறள்பேரவை செயலர் மேலைபழனியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை முன்னுதாரணமாக கொண்டு செயல்படுத்தினால் எங்கும் தமிழ் மலரும், எதிலும் தமிழ் திகழும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : panel ,Thirukkurali ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு...